
அமலுக்கு வந்தது முதல்வர் மருந்தகங்கள்…!! இனி 75 % தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கும்..!! மகிழ்ச்சியில் மக்கள்
தமிழகத்தில் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி சமீபத்தில் பெண்களுக்காக விடியல் பயணத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பேருந்துகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மருந்தகம் திட்டம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி “இன்று (24-02-2025) சென்னை-33, மதுரை-52, கடலூர்- 49, கோவை-42 மற்றும் தஞ்சை -40 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், இந்த மருந்தகங்களில் அனைத்து விதமான மருந்துகளும் சந்தை விலையை விட 75% தள்ளுபடி விலையில் கிடைக்கும்” என கூறப்படுகிறது.

























