இந்தியாவில் பிரபலமான IPL தொடரானது அடுத்த வருடம் மார்ச் மாத இறுதி முதல் மே மாத இறுதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட மகேந்திர சிங் தோனி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அவரை Uncapped Player ஆக தக்கவைக்க CSK அணி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























