1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மத்திய பிரதேச மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. இருப்பினும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
மத்திய பிரதேச மாநில பள்ளிகள் 2021 ஏப்ரல் 1 முதல் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்படும். இதனை செய்தியாளர் சந்திப்பின் போது மாநில கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் 1 முதல் 8 வகுப்புகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் – கல்வித்துறை அதிகாரிகள் திட்டம்!!
நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் பெற்றோரிடமிருந்து முன் ஒப்புதல் கடிதத்தை வழங்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டால், பள்ளிகள் இரண்டு ஷிப்ட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சமூக இடைவெளியை பராமரிப்பது மற்றும் மாநில மற்றும் மத்திய அரசு வழங்கிய பிற வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது பள்ளிகளின் முழுப் பொறுப்பாகும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- பள்ளி வகுப்பறைகளின் இருக்கை ஏற்பாடுகள் சமூக இடைவெளியை பின்பற்றி செய்யப்பட வேண்டும்.
- முகக்கவசம் அணிவதும், கைகளை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்வதும் வளாகத்திற்குள் கட்டாயமாகும்.
- அனைத்து வகுப்பறைகளும் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும்.
- முன்னதாக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஆண்டு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்