தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் – கல்வித்துறை அதிகாரிகள் திட்டம்!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பருவத்தேர்வு மூலமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதன்படி 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக அரசு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டும் இதே போல தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் நிலவி வருகிறது.
மார்ச் 15 முதல் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு – முதல்வர் அறிவிப்பு!!
இதனால் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. உயர்கல்வியில் சேர மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம் என்பதால் மாணவர்களுக்கு ஏதாவது தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க ஆலோசனை வழங்கபடுகிறது. இதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – தலைமை ஆசிரியருக்கு கொரோனா!!
இந்த பருவத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த பள்ளிகளில் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “‘மாவட்டம் அல்லது பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து பருவத்தேர்வு நடத்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.