5 ஆண்டுகளில் 41ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மாயம் – வெளியான ஷாக் ரிப்போர்ட்!

0
5 ஆண்டுகளில் 41ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மாயம் - வெளியான ஷாக் ரிப்போர்ட்!
5 ஆண்டுகளில் 41ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மாயம் - வெளியான ஷாக் ரிப்போர்ட்!
5 ஆண்டுகளில் 41ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மாயம் – வெளியான ஷாக் ரிப்போர்ட்!

பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில், குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கு அதிகமான பெண்கள் காணாமல் போய் இருப்பதாக அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

அறிக்கை வெளியீடு

இந்தியாவில் முக்கிய மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து வெளியான அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு 7,105 பெண்களும், 2017 ஆம் ஆண்டு 7,712 பெண்களும், 2018 ஆம் ஆண்டு 9,246 பெண்களும், 2019 ஆம் ஆண்டு 9,268 பெண்களும், 2020 ஆம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 41,621 பெண்கள் மயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு குடியரசு தின விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு – அரசு திட்டம்!

இது குறித்த அறிவிப்பை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. மேலும் 2019-20 ஆம் ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் இருப்பதாக 2021 ஆம் ஆண்டு மாநில சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் குஜராத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!