மீண்டும் உருவெடுக்கும் நவீன மீன் கடைகள்.. மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் நவீன மீன் மார்க்கெட் அமைப்பது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, திருவொற்றியூரில் அடிப்படை வசதி இல்லாமல் பழுதடைந்து இருக்கும் மீன் மார்க்கெட்டை இடித்து, புதிய கடைகளை கட்ட, சமீபத்தில் மாநகராட்சி மண்டல கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் ரூ.10 கோடி செலவில் 400 நவீன மீன் கடைகள் அமைப்பதற்கான வரைபடத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து ஆய்வு செய்தார்.


























