
தொகுதி மறுவரையறைக்கு எதிராக மு.க.ஸ்டாலின் நடத்தும் குழு மாநாடு.. எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்கின்றன என்று தெரியுமா..?
இந்திய அரசியலமைப்பின் 79 வது பிரிவின்படி, மக்களவை என்பது நாடாளுமன்றத்தின் கீழ் இயங்கும் சபையாகும். இந்த சபையானது 18 வயதுக்கு மேற்பட்டோர் அளிக்கும் வாக்குரிமையின் அடிப்படையில் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை கொண்டது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவை அதிகபட்சமாக 550 உறுப்பினர்களை உள்ளடக்கியது. இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்
Today Gold Rate: மக்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்…!! சென்னையில் சரமாரியாக உயர்ந்த தங்கம் விலை…!!
அதாவது, “மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22ம் தேதி நடத்த உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு மாநாட்டில் 3 மாநில முதலமைச்சர்களும், 20 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது”.

























