தமிழகத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்பதால் நோய்த்தொற்று குறித்த அச்சம் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் தகவல்:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 127 தொடக்கப் பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவை உரையின் போது கூறி இருந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியை திறந்து வைக்கும் விழாவில் இன்று கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் வேண்டும் – மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம்!!
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆசியாவின் முதல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா சேலத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, ஆளுமைத் திறனில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. பின்னர் தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அரியர் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் தொடங்கும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
இதற்கு பதிலளித்த அமைச்சர், பள்ளிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். நமது அண்டை மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் நேரடியாக தொடங்கப்பட்டு உள்ளன. ஆனால் தமிழகத்தில் படிப்படியாக தான் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்பதால் கொரோனா தொற்று குறித்த அச்சம் தேவையில்லை என அமைச்சர் கூறி உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்