சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் வேண்டும் – மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம்!!
மத்திய அரசு வெளியிட்டுள்ள 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரமலான் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ளதால் வேறு தேதி அறிவிக்க வேண்டும் என மதுரை எம்.பி வெங்கடேசன் சிபிஎஸ்இ க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ரமலான் பண்டிகை:
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அட்டவணையை பிப்ரவரி 2 ஆம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். மத்திய அரசு ரமலான் பண்டிகை விடுமுறையாக மே 14 ஆம் தேதியை அறிவித்துள்ள போதிலும், ரமலான் பண்டிகை பிறை தெரிவது மாறுபடும் என்பதால் மே 13 மற்றும் மே 15 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும் என மதுரை எம்.பி., சி.பி.எஸ்.இ க்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு!!
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை, “இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆன ரமலான் பண்டிகை தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 ஆம் தேதி நடைபெறும் தெரிவித்துள்ளனர். ஆனால் ரமலான் பண்டிகை பிறை தெரிவதை பொறுத்து மாறுபடும் என்பதால் மே 13 மற்றும் மே 15 ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது, சிபிஎஸ்இ க்கு அழகல்ல. இதன் காரணமாக இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பை மாற்றி அமைத்து வெளியிட வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்