மாணவர்கள் கவனத்திற்கு…!! பள்ளிகள் திறக்க லேட் ஆகுமா…? அமைச்சர் வெளியிட்டமுக்கிய தகவல்…!
தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஏப்ரல் 24 தேதியுடன் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஆகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா.. புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முடிவு..!!
இந்நிலையில், இன்று இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் கடும் வெயில் தாக்கத்தினால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா..? என்பது குறித்து முதல்வரே முடிவு எடுப்பர்” என்றும், “தற்போதைய நிலவரப்படி, ஜூன் 2 ஆம் தேதியே பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.


























