
வெளியானது 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி.. பள்ளிக்கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (08-05-2025) வெளியானது. இத்தேர்வை எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03% எனவும், வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் 98.82 சதவீதத்துடன் அரியலூர் முதல் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈரோடு, திருப்பூர், கோவை, கள்ளக்குறிச்சி தேர்ச்சி விகிதத்தில் அதிக சதவீதம் பெற்றுள்ளன.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மார்க் ஷீட் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், “12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு வரும் ஜூன் 25 முதல் தொடங்க உள்ளது. அதற்கான அட்டவணை நாளை (09-05-2025) வெளியிடப்படும். மே 14 முதல் மே 31 வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்” என அறிவித்துள்ளார்.

























