தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பநிலை:
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் தான் வெயிலின் கொடுமை மக்களை தாக்க ஆரம்பிக்கும். வழக்கமாக கத்தரி வெயில் மே 4ம் தேதி தொடங்கும், அதில் இருந்து 28 நாட்கள் வெயில் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த 10 நாட்களில் வெயில் சுமார் 100 டிகிரியை தொட்டு விடுகிறது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் இன்னும் நாட்கள் செல்ல செல்ல வெயிலின் கொடுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
கனமழை:
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நாமக்கல், கரூர், தருமபுரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதே போல கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுநாள் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது” என அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்