
தமிழகத்தில் வருகின்ற மே 15 ஆம் தேதி விடுமுறை.. ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. என்ன காரணம் என்று தெரியுமா..??

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்கள் அல்லது சுவாமி வழிபாடுகள் காரணமாக, அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கருதப்படுகிறது. மேலும், இத்திருவிழா ஆனது ஒவ்வொரு ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் வெகு விமரிசையாக நடைபெறும்.
எனவே “இந்த திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே. 15 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 14 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























