தமிழகத்தில் திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கான திருமண உதவித்தொகை உயர்த்தப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.
திருமண உதவித்தொகை:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அரசு பல்வேறு நல திட்டங்ககளை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகைகள் வழங்குதல், கல்வி அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்தல் போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய உரிமைகளை பாதுகாக்க ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட தடை – தலிபான்கள் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கான திருமண உதவித்தொகை உயர்த்தப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் படி ஆண்களுக்கான உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், பெண்களுக்கான உதவித்தொகை ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு ஏராளமான நலத்திட்டங்களையும் அறிவித்தார்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த முதலீடு; அதிக வட்டி – அஞ்சலக திட்டம்!
மேலும் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து ரூ.5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும் கல்வி உதவித்தொகை திட்டத்தில் முதல் பட்டதாரி என்பதற்கு பதில் முதல்முறை பட்டதாரி என்ற நிபந்தனையின் மாற்றம் செய்யப்படும். அனைத்து கள்ளர் தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும். தமிழகத்தில் கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.