தமிழகத்தில் மின்தடை ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்தடைக்காக அனுமதி தருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோய்பரவல் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்வது வழக்கம்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின் தடை ஏற்படுவதால் கடும் சிரமம் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் மின்தடை காரணமாக மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டில் இருந்து பணி புரிபவர்களின் வேலை பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? OPS எதிர்ப்பு!
அதன்படி அவர் கூறியதாவது, மின்தடைக்காக அனுமதி ஊரடங்கு காலம் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 6 மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையிலும் மின்தடை ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்தார். ஆன்லைன் தேர்வு மற்றும் வீட்டில் இருந்து பணி புரிபவர்களின் வேலை பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.