மே 15 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு தகவல்!!
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் பரவி வருவதால் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு அறிவிப்பு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக 5 மாநிலங்களில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது முழு ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.
‘இந்த’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
இந்நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.