‘இந்த’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0
இந்த' சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி - தேர்தல்
இந்த' சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி - தேர்தல்
‘இந்த’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா சான்றிதழ்:

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் மத்தியில் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வருகின்ற மே 2ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஏற்கனவே தற்போதைய கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தேர்தல் ஆணையம் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் மே 2 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று கட்டுப்பாடுகளை விதித்தது தேர்தல் ஆணையம்.

தமிழகத்திற்கு 1. 50 கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் – அரசு உத்தரவு!!

அதன்படி, வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா நெகடிவ் சான்று அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!