மே 1 முதல் 18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – விண்ணப்ப பதிவு தொடக்கம்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி முன்பதிவு செய்ய கோவின் இணையதளம் மூலமாக இன்று மாலை 4 மணி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. மேலும் தொடங்கப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த இணையதளம் முடங்கியது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த சில வாரங்களாக உச்சம் பெற்று வருகிறது. இதனை தடுக்க பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் மையங்களை அதிகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாநில மக்களும் மே மாதம் 1 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக பல தடுப்பூசி மையங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிய வாய்ப்பிருக்கும். இதனால் அதனை சரி செய்யும் நோக்கில் கோவின் இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் CoWin இணையதளம் அல்லது, ஆரோக்கிய சேது இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமுள்ள 18 வயது நிரம்பியவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளம் மூலமாக இன்று (ஏப்ரல் 28) மாலை 4 மணி முதல் விண்ணப்பிக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதிகம் பேர் இந்த வலைத்தளத்திற்குள் சென்ற காரணத்தினால் அந்த வலைத்தளம் முடங்கியது.
ஏற்கனவே இந்த தளத்தில் விண்ணப்பிக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் நள்ளிரவு 12 மணி முதல் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அது சரியாக செயல்படவில்லை. தற்போது இதற்கான விண்ணப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் இந்த வலைத்தளம் முடங்கியது.