இன்று முதல் மாநிலத்தில் கடும் ஊரடங்கு? முதல்வர் தகவல்!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் அம்மாநிலத்தில் இன்று முதல் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டுமாக வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரவலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.
பிற்பாடு பொதுமுடக்கத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இதை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அம்மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு, பரிசோதனை வசதிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்கள் ஊதியம் – நிதி ஒதுக்கீடு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அறிவிப்பது தான் ஒரே தீர்வு என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு அறிவித்தால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தவிர கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா மாநிலம் தான் ஒரு நாளைக்கு 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி முதல் மாநிலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்