10, 12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் – மாநில கல்வித்துறை அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அங்கு இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள்:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் இரவுநேர ஊரடங்குடன் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி துவங்கி மே இறுதி வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற சந்தேகங்கள் எழுந்து வந்தது.
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்கலாம் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அம்மாநில கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
முன்னதாக மஹாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் ‘இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கூடிய விரைவில் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்’ என தெரிவித்திருந்தார். அதன்படி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் தேர்வுகள் நடப்பது உறுதி என தெரிய வந்துள்ளது. கூடுதலாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்