மது பிரியர்களுக்கு ஷாக் அப்டேட்.. விலை உயரும் அபாயம் – அரசு வெளியிட்ட அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபான பார்கள் மற்றும் கிளப்களில் மதுபான சேவைக்கான வாட் வரியை அரசு உயர்த்தி இருக்கிறது. அதனால் மதுபானங்களின் விலை உயர இருக்கிறது.
மதுபான விலை
மகாராஷ்டிராவில் பார்கள் மற்றும் கிளப்களில் மதுபான சேவைக்கான வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி நவம்பர் 1 ஆம் தேதி முதல் கிளப்புகளில் மது அருந்த 5 சதவீதம் கூடுதல் வாட் வரி செலுத்த வேண்டும். அதாவது ஏற்கனவே இருந்த வாட் வரியை சேர்த்து 10 சதவீதம் செலுத்த வேண்டும். அதனால் மதுபானங்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மது பிரியர்கள் இனி மதுவிற்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.
பண்டிகை தினம் முடிந்தும் சற்றும் குறையாத காய்கறிகளின் விலை – பொதுமக்கள் அவதி!!
குறிப்பாக மும்பையில் உள்ள பார்கள் மற்றும் கிளப்புகளில் மது விலை அதிகமாக இருக்கும். இருந்தாலும் கவுண்டர் அல்லாத விற்பனைக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நட்சத்திர ஹோட்டல்களில் 20 சதவீத வாட் வரி செலுத்தப்பட்டு வருவதால் இந்த உயர்வு அந்த ஹோட்டல்களுக்கு பொருந்தாது. அரசு இதற்கு முன் சமீபத்தில் உரிமங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியது. தற்போது மீண்டும் வாட் வரி அதிகரிப்பால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.