கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1500 நிவாரண நிதி – மாநில அரசு அறிவிப்பு!!
மஹாராஷ்டிராவில் கட்டுமான பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,500 வழங்கப்படும் என தொழில் நலத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.
நிவாரண நிதி:
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவுவதால் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி, கடுமையான கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை குறைக்க சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் படி இரவு நேர ஊரடங்கு வார இறுதி ஊரடங்குகள் ஏற்படுத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதனால் கடும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமான பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1,500 வழங்கப்படும் எனவும் அது தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகள் மே 14 வரை நீட்டிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு? ஆளுநர் விளக்கம்!
இதனிடையே 9.17 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 4 நாட்களில் வழங்கப்படும் எனவும் இதற்காக ரூபாய் 137.61 கோடி ஒதுக்கப்ட்டுள்ளதாக தொழில் நலத்துறை அமைச்சர் ஹசன்முஷ்ரிப் கூறியுள்ளார். கடந்த வருட கொரோனா பாதிப்பின் போது கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் கட்டுமானத் துறை நலவாரியம் இம்முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்