புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு? ஆளுநர் விளக்கம்!

0
புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு? ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு? ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு? ஆளுநர் விளக்கம்!

புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு செயற்கை சுவாச கருவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு இல்லை:

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.  இதனால் அங்கு நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைவாக செய்து வருகிறது.  ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியான வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் புதுச்சேரியில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு செயற்கை சுவாச கருவிகள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கலந்து கொண்டு 2 செயற்கை சுவாச கருவிகளை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்திய விமானங்களுக்கு தடை – கம்போடியா, பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!!

இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தற்போது உள்ள கட்டுப்பாடுகள் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கலாம். கடை உரிமையாளர்களும் பொது மக்களும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டம் கூட வேண்டாம் என்பதற்காக தான் இந்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!