இந்திய விமானங்களுக்கு தடை – கம்போடியா, பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று காரணமாக இந்திய பயணிகள் விமானங்களுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா நாட்டு அரசு மே 14ம் தேதி வரை தடைவிதித்துள்ளது.
விமானங்களுக்கு தடை :
கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவுவதால் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்குகளை அமல்படுத்தி வருகிறது. முதல் கொரோனா வைரசை விட தற்போதைய இரண்டாம் கொரோனா வைரஸ் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்தியாவில் பாதிப்பு கடுமையாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்திய விமானங்களை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்திய பயணிகளை பல நாடுகள் தடை செய்துள்ளது. ஏற்கனவே கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்திய விமான பயணிகளை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
மயிலாடுதுறையில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இதன் தொடர்ச்சியாக தற்போது பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகள் இந்திய பயணிகளை அனுமதிக்க தடை விதித்துள்ளது. இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த தடை வரும் மே 14 வரை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களில் இந்தியா சென்று திரும்பிய எந்த பயணியும் கம்போடியாவில் நுழைய முடியாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்