யுபிஎஸ்சி தேர்வு – 1312 பேர் ‘ஆப்சென்ட்’!!
யுபிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்காக நேற்று நடைபெற்ற போட்டித்தேர்வில் பங்கேற்க 2299 பேர் விண்ணப்பித்த நிலையில் 987 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுகள்:
மதுரையில் நேற்று மத்திய அரசு தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்க 2299 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணிகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எழுத்துத் தேர்வு மூலமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ சேவை தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கல்லூரி வாகனங்களுக்கு சிசிடிவி & ஜிபிஎஸ் பொருத்துவது கட்டாயம் – உயர்கல்வி நிலையங்கள் அதிருப்தி!!
நேற்று மதுரையில் உள்ள எஸ்.இ.வி மெட்ரிகுலேஷன் பள்ளி உட்பட 6 பள்ளிகளில் 3 பிரிவாக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை எழுத 2299 பேர் விண்ணப்பித்த நிலையில் 987 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1312 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவித்தனர். இந்த தேர்வை மதுரை கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமாரி, துணை தாசில்தார் மீனாகுமாரி, சூர்யா ஆகியோர் கண்காணித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்