கல்லூரி வாகனங்களுக்கு சிசிடிவி & ஜிபிஎஸ் பொருத்துவது கட்டாயம் – உயர்கல்வி நிலையங்கள் அதிருப்தி!!
தமிழகத்தில் பள்ளி வாகனங்களை போல் கல்லூரி வாகனங்களிலும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உயர்கல்வி நிலையங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள்:
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் பொருத்துவது கட்டாயம் எனவும் அப்போது தான் போக்குவரத்துத்துறை தகுதி சான்று வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பி.எஸ்இ நர்சிங் மற்றும் பி.பார்ம் படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 10ம் தேதி துவக்கம்!!
இந்த உத்தரவை தொடர்ந்து கல்லூரிகளிலும் உள்ள வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் பொருத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா காரணமாக 10 மாதங்களாக திறக்கப்படாமல் இன்று முதல் திறக்கப்பட்டன. சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் பொறுத்தப்படாமல் எப்.சி பெற போக்குவரத்துத்துறை அலுவலகத்தை அணுகும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதால் கல்லூரிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – வினாத்தாள் தயாரிப்பு பணிகள்!!
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், “பள்ளிகளுக்கு மட்டுமே சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கட்டாயம் என உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிலையில் உயர்கல்வி வாகனங்களுக்கு தற்போது கல்லூரி திறக்கும் நேரத்தில் இப்படி அறிவிப்பது வீண் அலைச்சலை ஏற்படுத்தியுள்ளது” இவ்வாறு தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்