தனியார் பள்ளிகளில் முழு கல்விக்கட்டணம் வசூல் – பெற்றோர்கள் வேதனை!!
கல்விக்கட்டணம்:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் ஏதும் செயல்படவில்லை. 2019-2020 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மேலும், 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வழக்கம் போல் தொடக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் மூலம் கற்பிக்க தொடங்கியது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – ரயில் சேவைகள் நிறுத்தம்!!
கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியது. அதிலும் நேரடி வகுப்புகள் ஏதும் நடக்காத நிலையில் முழுக்கல்வி கட்டணத்தையும் பள்ளிகள் கேட்டது. இதனால் பெற்றோர்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, நீதிமன்றம் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 75% மட்டுமே பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையிட்டது. இதையும் மீறி மதுரையில் உள்ள தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கல்வி கட்டணத்தையும் கட்ட சொல்லி நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவர்கள், நீதிமன்ற உத்தரவை மீறி முழுக்கட்டணத்தையும் வசூலிக்கும் பள்ளிகள் மீது ரசீதுடன் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்