தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – ரயில் சேவைகள் நிறுத்தம்!!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவலின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக தற்போது இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டவது அலை வீரியம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை – தேசிய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தி, இதனை கடைபிடிக்காதவர்களிடம் அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கின் போது போக்குவரத்திற்கு தடை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
பல்வேறு கட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கின் போது வழக்கம் போல் ரயில் போக்குவரத்து செயல்படும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. நாளை (ஏப்ரல் 25) தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக தற்போது தெற்கு ரயில்வே துறை ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
அதன்படி நாளை மற்றும் வருகிற மே மாதம் 2ம் தேதி அன்று திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-திருச்சி, விழுப்புரம்-மதுரை, மதுரை-விழுப்புரம் உள்ளிட்ட சில சிறப்பு ரயில்கள் இயங்காது என்று தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.