மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி (DA) வழங்கப்படாது – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 2020 அன்று நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) ஜூலை 2021 முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூரவ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
நிலுவை அகவிலைப்படி:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் துறைகள் முடங்கின. நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரிசெய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு கூடுதல் செலவினங்களை குறைக்க திட்டமிட்டது. வரிவசூல் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு இந்த முடிவுகளுக்கு வித்திட்டது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இதனால் மத்திய அரசு ஊழியர்கள் (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (DR) வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (Dearness Allowance) நிறுத்தி வைக்கப்பட்டது. இது ஊழியர்களின் மாத ஊதியம், PF, கிராச்சுவிட்டி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக அரசுக்கு மிகப்பெரிய தொகை மிச்சமானது. இது கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தினசரி 3 லட்சத்திற்கும் மேல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை – தேசிய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூரவ அறிவிப்பின் படி, கடந்த ஜனவரி 1, 2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலுவை அகவிலைப்படி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான நிலுவை அகவிலைப்படி தொகை வழங்கப்படாது எனவும், ஏற்கனவே தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்