ரயில் நிலையங்களில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி.. ரூ.5000 கட்டணம் – வெளியான சூப்பர் அப்டேட்!
மக்கள் மத்தியில் போட்டோஷூட் மோகம் அதிகரித்து வரும் நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் புதுமண தம்பதிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போட்டோஷூட் அனுமதி:
இந்திய ரயில்வே துறை வருவாய் பெருக்க பல திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. மேலும் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் அமல்படுத்தி ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வது, ரயில் நிலையங்களில் கடைகள் அமைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்தகட்டத்திற்கு சென்று மக்கள் மத்தியில் தற்போது போட்டோஷூட் மோகம் அதிகமாக இருப்பதால், அதனை வைத்து வருவாய் பெருக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பள்ளி திறப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்க கோரிக்கை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தற்போது ரயில் நிலையங்களில் சினிமா எடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருமண போட்டோஷூட் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை ரயில் நிலையத்தில் போட்டோ எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு ரூ.5000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் பெட்டியின் பின்புலம் போட்டி எடுக்க கூடுதல் கட்டணமாக 1,500 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.