மதுரை ஊர்க்காவலர் படை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 22 கடைசி தேதி!

0
மதுரை ஊர்க்காவலர் படை காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 22 கடைசி தேதி!
மதுரை ஊர்க்காவலர் படை காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 22 கடைசி தேதி!
மதுரை ஊர்க்காவலர் படை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 22 கடைசி தேதி!

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவலர் படை பணியிடங்கள் தற்போது நிரப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஊர்க்காவல் படை வெளியிட்டுள்ளது.

ஊர்க்காவல் படை:

தமிழக காவல் துறைக்கு உதவும் வகையில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்த ஊர்க்காவல் படையினர் பொது இடங்கள் மற்றும் திருவிழா, பண்டிகை உள்ளிட்ட நேரங்களில் கூட்ட நெரிசலை சரி செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அவ்வப்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்

மீனா கண்ணில் சிக்கிய விஜயா, மனோஜ்.. முத்துவிடம் மாட்டிவிடுவாரா? “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!

அந்த வகையில் தற்போது மதுரை மாவட்ட ஊர்க்காவல் படை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் அரசு ஊழியர்கள் ஊர்க்காவலர் படை பிரிவில் விண்ணப்பிக்க விரும்பினால் தனது துறை சார்ந்த அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் மதுரை ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் ஏப்.20 முதல் 22ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!