மதுரை ஆவின் இயக்குனர்கள் 11 பேர் தேர்வு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி!!
மதுரை ஆவின் நிறுவனத்தில் 11 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்ட உத்தரவினை ரத்து செய்த நீதிமன்றம், புதிய இயக்குனர்களை தேர்வு செய்ய தேர்தலை நடத்துமாறு அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளது.
ஆவின் இயக்குனர்கள் தேர்வு:
மதுரை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்வில் கடந்த பிப்ரவரி 15, 2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்றிருக்க வேண்டும். இதில் குறிப்பிடப்பட்ட 13 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும், பிறரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஓரிரு வாரங்களில் 2,000 மினி கிளினிக்குகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!
மேலும் பிப்ரவரி 29ம் தேதி 13 இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே இந்த உத்தரவினை ரத்து செய்து புதிய தேர்தலை நடத்த வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 11 பேரின் பதவியேற்பிற்கு தடை விதித்தனர். மேலும் போட்டியின்றி தேர்வான அறிவிப்பை ரத்து செய்த நீதிபதிகள், புதிய தேர்தலை விதிகளுக்கு உட்பட்டு முறையாக நடத்துமாறு உத்தரவிட்டு உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்