மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 15ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்களிடையே மிகுந்த அச்சம் நிலவுகிறது. அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது .
மேலும் அரசுகள் மாநிலங்களுக்கேற்ப புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கின்றன. இரவு நேர மற்றும் வரா இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில அரசு மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா இராண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாலும், தொற்று பரவல் அதிகரிப்பதாலும் அம்மாநில அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு – அரசுக்கு அதிமுக கோரிக்கை!!
இந்த முழு ஊரடங்கின் போது மக்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தொடர்ந்து கிடைக்கும். மேலும் அவசர தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல வேண்டும். மருந்து கடைகள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் மாநிலம் முழுவதும் மே 15 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சௌகான் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்