தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு – அரசுக்கு அதிமுக கோரிக்கை!!
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்திற்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என அதிமுகவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இட ஒதுக்கீடு:
நாடு முழுவதும் குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு உள்ளது. அதே போன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராத்தா சமூக பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு பல தரப்பினரும், பிற சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மராத்தா சமூகத்திற்கான 69% இட ஒதுக்கீட்டை முழுவதுமாக ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கும் இந்த நிலை ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது என்று கூறி அதிமுக.,வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு ரூ.42,000 – மாநில அரசு அறிவிப்பு!!
அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் மக்களின் உயர்வுக்கும், சமூக நீதிக்கும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் மராத்தா சமூக இட ஒதுக்கீடை ரத்து செய்துள்ளது. தமிழகத்திலும் இந்நிலை நடக்கும் என அச்சம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் மேலும் அதற்கான நடவடிக்கைகையை விரைந்து எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்