மாதவரம் தாவரவியல் பூங்கா – ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.. விரைவில் விரிவாக்கப்பணிகள்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மாதவரம் பால்பண்ணை அருகே தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவை மேம்படுத்த தற்போது பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்கா:
தமிழகத்தில் ஊட்டிக்கு அடுத்த படியாக சென்னையில் கடந்த 2010ம் ஆண்டு செம்மொழி தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. அடுத்ததாக தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் சென்னையில் மாதவரம் பால்பண்ணை அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பச்சை பசேலென அழகாக விளங்கி வருகிறது.
தமிழகத்தில் தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணி நீக்கம் – அறிவிப்பு வெளியீடு!
இது சென்னையில் 2 – வது பெரிய பூங்காவாகும். இதில் 100க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல எண்ணற்ற மருத்துவ மூலிகைகளும் உள்ளது. இந்த பூங்காவை மேம்படுத்த தற்போது தமிழக அரசு சார்பில் வேளாண் பட்ஜெட்டில் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிதியின் மூலம் பூங்காவின் நீரூற்றுகள் மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பணிகளுக்கு பிறகு பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.