பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி – கொரோனாவால் ரத்து!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த மாதம் ஆன்லைன் வழித்தேர்வுகள் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி கல்லூரிகளில் பயிலும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மற்ற இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.
இதனால் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்கள் நீடித்து வந்தது. இறுதியாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 77 கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த மாதம் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அந்தந்த கல்லுாரிகளிலேயே வைத்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கா ? – மளிகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் !
கொரோனா தொற்று அச்சத்தால் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வாணையர் தர்மராஜ் கூறும்போது, ‘வாகனங்கள் மூலம் விடைத்தாள்கள் சேகரிக்கும் பணி ரத்து செய்யப்படுகிறது. அந்தந்த கல்லுாரிகளிலேயே விடைத்தாள்களை திருத்தி அதன் மதிப்பெண்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்