தமிழகத்தில் முழு ஊரடங்கா ? – மளிகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் !
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற பயத்தில் பொதுமக்கள் மளிகைக்கடைகளில் குவிந்துள்ளனர்.
பொதுமுடக்க அச்சம்
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. என்னதான் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. முன்னதாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு காரணமாக மக்கள் பலவிதங்களில் கஷ்டங்களை சந்திக்க நேர்ந்தது. மக்களின் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவியதால் மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளானார்கள்.
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் கூட இந்த வைரஸின் தாக்கம் மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற பயம் மக்களிடையே எழத்துவங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் உணவு தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில் மாளிகைக்கடைகளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
நாளை முதல் ஊரடங்கு அமல் – முதல்வர் அறிவிப்பு !
இதுகுறித்து கோவை மாவட்டத்தின் மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறுகையில், ‘இரண்டு நாட்களாக மளிகை பொருட்களை வாங்கி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வைத்துள்ளனர். கடந்த முறை போல இந்த முறை உணவு தட்டுப்பாடுகள் ஏற்படாது. அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுமுடக்கம் அறிவிக்காமல், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தலாம்’ என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்