நாளை முதல் ஊரடங்கு அமல் – முதல்வர் அறிவிப்பு !

0
நாளை முதல் ஊரடங்கு அமல் - முதல்வர் அறிவிப்பு !
நாளை முதல் ஊரடங்கு அமல் - முதல்வர் அறிவிப்பு !
நாளை முதல் ஊரடங்கு அமல் – முதல்வர் அறிவிப்பு !

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவித்து அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.

பொது முடக்கம்

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீசிக்கொண்டிருக்கிறது. உத்திர பிரதேசம், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் கூறும் போது, ‘மத்திய பிரதேச மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கும் எண்ணம் இல்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக வங்கிகளில் 3 நாட்கள் விடுமுறை – கொரோனா தொற்று எதிரொலி !

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,126 பேர் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளதை அடுத்து 13 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் போபால் மற்றும் இந்தூர் பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!