ரயில் நிலையத்தில் காத்திருப்போருக்கு சொகுசு வசதிகள் – ஒரு மணி நேரத்திற்கு ரூ. 200 கட்டணம்!!

0
ரயில் நிலையத்தில் காத்திருப்போருக்கு சொகுசு வசதிகள் - ஒரு மணி நேரத்திற்கு ரூ. 200 கட்டணம்!!

ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்காகவே புதிய நவீன உயர்தர வசதிகளுடன் அறை திறக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணி:

பேருந்து பயணத்தை காட்டிலும் ரயில் பயணத்தில் கூடுதல் சௌகரியம் மற்றும் கட்டணமும் குறைவு என்பதனால் பெரும்பாலானோர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ரயில் பயணிகளுக்காகவும் ரயில்வே நிர்வாகம் ஏகப்பட்ட வசதியினை செய்து கொடுத்து வருகிறது. அந்த வகையில், ரயில் நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய உயர்தர அறை திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு இணையான அதிநவீன வசதிகளுடன் இந்த அறை பயணிகளின் வசதிக்காக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறையை சுமார் 180 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதாவது, சொகுசு இருக்கை, படுக்கை வசதிகளுடன் பயணிகளுக்கு தேவையான சைவ, அசைவ உணவுகள், சிற்றுண்டி கடை, உடைமைகளை வைக்க பிரத்தியேக வசதி, கழிப்பறை வசதிகளும் உள்ளன. மேலும், ஒரு மணி நேரம் இந்த அறையில் தங்குவதற்காக பயணிகளிடமிருந்து ரூ. 200 கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும், பயணிகளுக்கு இலவச Wifi வசதி, டீ, காபி உள்ளிட்டவைகளும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், 3 மணி நேரம் தங்குவதற்கு ரூ.840 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், கூடுதலாக பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானமும் வழங்கப்பட இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

RRB ALP 2024 Syllabus – Download Exam Pattern Here!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!