மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு உத்தரவு
மக்களவையின் பதவி காலம் 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. அதனால் புதிய அரசை அமைக்க வேண்டியது அவசியம். எனவே ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – காங்கிரசின் வாக்குறுதிகள்!
இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக மக்களவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் கண்காணிக்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.