மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேர்தல் விதிகள்
நாடாளுமன்ற மக்களவை முடிவடைய உள்ள நிலையில் 18வது மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதனால் தேர்தல் நடத்தை விதிகள் இப்போது முதல் அமலுக்கு வந்துள்ளது. அது குறித்து விவரங்களை பார்க்கலாம்.
- வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
- சமூக வலைத்தளங்களில் கட்சிகள் குறித்து விமர்சிக்கலாம். ஆனால் போலியான வதந்திகள் பரப்பக் கூடாது.
- சமூக விரோதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல பணம், பொருட்கள், மது விநியோகம் செய்யப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும்.
- வாக்குக்கு பணம், பொருள் கொடுக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தேர்தல் நடைபெறும் போது வன்முறைகள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி போதும்!
- மாநில எல்லைகள் ட்ரான் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் நாடு முழுவதும் சோதனை சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்.
- வேட்பாளர்கள் பற்றிய விவரங்களில் செயலி மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
- இரவு நேரத்தில் வங்கி வாகனங்களில் பணம் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முழுவதுமாக கண்காணிக்கப்படும்.
- அரசியல் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.
- மதரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது.
- தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தக்கூடாது.