மே 3ம் தேதி வரை 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – அரசு உத்தரவு!!

0
மே 3ம் தேதி வரை 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு - அரசு உத்தரவு!!
மே 3ம் தேதி வரை 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு - அரசு உத்தரவு!!
மே 3ம் தேதி வரை 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – அரசு உத்தரவு!!

ஜம்மு காஷ்மீரில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வரும் மே 3ம் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு:

கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவ தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு முதன் முதலாக நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கிற்கு பின்னர் தொற்றின் தாக்கம் நாட்டில் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்ப தொடங்கினார்கள்.

தமிழகத்தில் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், 2021 மார்ச் மாதத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. தொற்றின் பரவல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தது. அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த தொடங்கியது. இருப்பினும் தொற்று பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று விட்டது. இதனால் நாட்டில் பல மாநிலங்களில் இரவு நேர, வார இறுதி மற்றும் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,474 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. மேலும் 26 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இன்று முதல் 11 மாவட்டங்களிலும் மே 3ம் தேதி காலை 7 மணி வரை அங்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!