சென்னையில் ஊரடங்கு அமல் எதிரொலி – மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாசு குறைந்ததுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நதி நீரின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசு குறைவு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவத் தொடங்கியது இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டனர். ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்தது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பற்றாக்குறையும் நிலவியது. இத்தகைய சூழலில் தொற்று தடுப்பு முயற்சியாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளையும் ஊரடங்குகளையும் விதித்தது. அதாவது பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும்.
தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
மேலும் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2021ம் வருடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் மேலும் ஓமிக்ரான் வைரஸ் தொற்றும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று பரவலால் தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டுப்பாடுகளால் பொது மக்கள் பயணங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறைந்ததால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மாசு குறைந்ததுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய நதிகளின் நீரின் தரக் கண்காணிப்பு, ஊரடங்கு காலத்தில் நாட்டில் நதி நீரின் தரத்தில் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. கரிம மாசுபாடு குறைப்பு, மேற்பரப்பு நீர் நிலைகளில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பு ஆகியவை பெருந்தொற்று காலத்தில் காணப்பட்டன. மேலும் டெல்லி, பரிதாபாத், குருகிராம், மும்பை ஆகிய முக்கிய பெருநகரங்களில் பிஎம்2.5, பிஎம் 10, எஸ்ஓ2 மற்றும் என்ஓ2 ஆகியவற்றின் செறிவுகள் குறைந்தது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.