அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அத்துடன் அகவிலைப்படி 14% அதிகரிக்கப்பட்டு தற்போது அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதன் விளைவாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் 18 மாத கால நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பிறகு அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – ரூ.250 இருந்தால் போதும்!

பொதுவாக அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இன்னும் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. அத்துடன் 18 மாத கால நிலுவை தொகையும் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் மாதம் கடந்த 18ம் தேதி அன்று அகவிலைப்படி, நிலுவைத்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கிடைத்தது. ஆனால் இதுவரை இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அடுத்த கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!