Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – ரூ.250 இருந்தால் போதும்!
பெண் குழந்தைகளின் எதிர்கால திட்டங்களுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இணைந்து பயன் பெறலாம். எப்படி செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைவது மற்றும் அதன் பயன் குறித்தான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். 10 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது இரண்டு குழந்தைக்கு கணக்கு துவங்கலாம்.
சென்னையில் நாளை (மார்ச் 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்காக தொகை வழங்கப்படுகிறது. பெண்ணிற்கு திருமணம் ஆகும் சமயத்தில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மூடிவிடலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பினால் பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சமயத்தில் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயது சான்று ஆவணமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், செல்வ மகள் சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கு ரூ. 250 செலுத்தினால் போதும். இதற்கு முன்பு ரூ. 1,000 செலுத்தி கணக்கை துவங்குவது போல இருந்தது. ஒவ்வொரு மாதமும் ரூ.1,000த்தில் இருந்து ரூ. 1,50,000 வரை செலுத்தி பயன் பெறலாம். காசோலை, வரைவோலை மூலமாகவும் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளலாம். டெபாசிட் செய்ய தவறிய பட்சத்தில் கணக்கு அப்படியே திருத்தம் செய்யப்படும். இந்நிலையில் ஆண்டுக்கு ரூ. 50 அபராதம் செலுத்தி கணக்கை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.