சென்னையில் நாளை (மார்ச் 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள இடங்களில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு நாள் கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் சமையல் முதல் அலுவலக வேலை வரை செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டனர். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – பணிகள் தீவிரம்!
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச் 26) பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், தாம்பரம், கடப்பேரி, துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பவானி அம்மன் காலனி கோவில் தெரு, பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, கல்கி பிளாட்ஸ், பெரம்பூர், கொளத்தூர், வீனஸ் நகர், ரமணி நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், விவேகானந்தா தெரு, வில்லிவாக்கம் சாலை, எல் என் பி தெரு, அசோகா தெரு, துரைப்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியத்தின் சார்பில் தெரிவித்து உள்ளனர்.