தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – பணிகள் தீவிரம்!

0
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு - பணிகள் தீவிரம்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு - பணிகள் தீவிரம்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் விவசாயத்திற்கு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. மேலும் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெறுவது, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை – விண்ணப்பிப்பது எப்படி?

அதனால் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை பரிசீலனைக்கு உட்படுத்தி தள்ளுபடி பெற தகுதியான நபர்களை கண்டறிந்து வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தவர்களின் நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் விவரம், ஆதார் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சரிபார்க்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தவர்களில் 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக பட்ஜெட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடலுார் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி பெற தகுதியான 31,165 பேருக்கு ரூ.123.45 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் அனைத்து தள்ளுபடி பெற தகுதியானவர்கள் அவர்கள் கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளில் சென்று தங்களின் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!