குழந்தை பிறக்க சிகிச்சை எடுக்கும் முல்லை, மகிழ்ச்சியில் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த திருப்பம்!
தனக்கு குழந்தை பிறக்காது என்பதை அறிந்துகொண்டு வருத்தத்தில் இருக்கும் முல்லைக்கு அடுத்து குழந்தை பிறக்க சிகிச்சை எடுக்க போகும்படியான ட்விஸ்ட் கூடிய விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரவுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை கதிர் மறைத்து வந்தார். இதன் பின்பு அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்ட முல்லை இதுக்கு மேல் இந்த வீட்டில் வாழ்ந்து என்ன பயன் என நினைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
ராதிகாவுடன் கோபியை பார்த்த எழில், பாக்கியாவிடம் சிக்குவாரா? சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
உனக்கு நான் இருக்கிறேன் என கூறி கதிர் வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டிற்கு வந்த முல்லை யாருடைய முகத்தையும் பார்க்க முடியாமல் தவிக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் முல்லைக்கு ஆறுதல் கூறுகின்றனர். கதிர் முல்லையை வைத்தே இந்த சீரியலை பல மாதங்களுக்கு கொண்டுசெல்ல உள்ளனர். தனக்கு குழந்தை பிறக்காததை நினைத்தே வருந்தும்படியாக தான் சில நாட்களுக்கு சீரியல் செல்லவுள்ளது. ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் சிறு சிறு குறும்பு செய்து முல்லையின் மனதை மாற்ற முயற்சிக்கவுள்ளனர்.
கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதைக்களம் வேறு விதமாக மாறவுள்ளது. திடீரென முல்லை கர்ப்பமாவாரா அல்லது குழந்தை பிறக்க சிகிச்சை மேற்கொள்ள போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் முல்லைக்கு எப்படியும் குழந்தை பிறக்கத் தான் போகிறது. ஆனால் எத்தனை சூழ்ச்சிகளுக்கு பிறகு குழந்தை பிறக்கப் போகிறது என்பது தான் தெரியவில்லை.