பொது மக்களுக்கு ஊரடங்கு அமல் – வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.. வனத்துறை உத்தரவு!
பொது மக்களுக்கு ஊரடங்கு அமல் – வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.. வனத்துறை உத்தரவு!
யானை நடமாட்டம்:
கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை தற்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த வேளையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த யானை கேரள பகுதியில் பல நபர்களை காயப்படுத்தியுள்ளது. அத்துடன் யானை தாக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.771/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!
தற்போது சுற்றி திரியும் அரிசி கொம்பன் யானை நடமாட்டத்தால் தேனி மற்றும் கம்பம் நகர் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரிசி கொம்பன் யானை மின்வாரிய அலுவலகம் அருகே சுற்றித்திரிவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வனத்துறை தடை விதித்துள்ளது.