தமிழகத்தில் அக். 25ம் தேதி உள்ளூர் விடுமுறை – குஷியில் மாணவர்கள்.. விவரம் உள்ளே!

0
தமிழகத்தில் அக். 25ம் தேதி உள்ளூர் விடுமுறை - குஷியில் மாணவர்கள்.. விவரம் உள்ளே!
தமிழகத்தில் அக். 25ம் தேதி உள்ளூர் விடுமுறை - குஷியில் மாணவர்கள்.. விவரம் உள்ளே!
தமிழகத்தில் அக். 25ம் தேதி உள்ளூர் விடுமுறை – குஷியில் மாணவர்கள்.. விவரம் உள்ளே!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,038 – வது சதய விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்ததாக கல்வெட்டுகள் கூறுகிறது. இதனை அடிப்படையாக வைத்து ஆண்டு தோறும் அவரது பிறந்த நட்சத்திர தினம் சதய விழாவாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ராஜராஜ சோழனின் 1,038 வது சதய விழா அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை முன்னிட்டு கோவிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய மாற்றம் – முழு விவரம் இதோ!

இந்த சதய விழா நாட்களில் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதனை தொடர்ந்து பட்டிமன்றம், நாடகம், நாட்டியம், கருத்தரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். நடப்பு ஆண்டு ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக். 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!